நாகர்கோவில் பிப் 2,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கோட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, புகையிலைப்பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த நாராயணசிங் என்பவரின் மகன் கமலேஷ்(39), என்பவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ எடை கொண்ட புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா,குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.