கிருஷ்ணகிரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . P. தங்ககதுரை, அவர்களின்
உத்திரவின் பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. C.சங்கு
சைபர்கிரைம் அவர்களின் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர்கிரைம்
காவல் ஆய்வாளர் . P.கவிதா என்பவர் தலைமையில் துரித
நடவடிக்கை மேற்கொண்டதில் சுமார் ரூ.7,20,000/- மதிப்பிலான 50
செல்போன்கள் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெவ்வேறு
மாவட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று கிருஷ்ணகிரி மாவட்ட கவல்
கண்காணிப்பாளர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை
உரியவர்களிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர்
அவரகள் செல்போன் தொலைந்தாலோ, பறித்துச் சென்றுவிட்டாலோ
உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அலுவலத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல்
நிலையத்திலோ புகார் அளிக்கும்படியும், தொலைந்து போன செல்போன்
தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்திலும், சைபர்
குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வுடன் இருக்குமாறும், ஏதேனும் சைபர்
குற்றங்களில் பொதுமக்கள் பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற
எண்ணில் Toll Freeபுகார் அளிக்குமாறும், வேறு சைபர்கிரைம் சம்பந்தமான
புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார்
அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.



