நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி அருகேயுள்ள அரவேனு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் துப்புரவு பணியின் போது தேயிலை தூள் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி ஒரு தொழிலாளி பலி.
பிரபல தனியார் தேயிலை தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தொழிற்சாலையில் திருச்சியை சேர்ந்த சிவக்குமார் (51) என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் இரவு பணியின் போது தேயிலை அரைக்கும் இயந்திரத்தை இயக்கப்பட்டவாறே சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.அப்போது அவர் அணிந்திருந்த
டிசர்ட் இயந்திரத்தின் பெல்ட் கம்பியில் சிக்கி அவரது கழுத்து பகுதியுடன் இறுகிய நிலையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடனே இச்சம்பவம் குறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவக்குமாரின் உடலை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தகிரி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.