வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், உண்ணாமலை சமுத்திரம் கிராமம் , பாலாற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு பொங்கல் வார்த்தலும், வேள்வி பூஜையும், மற்றும் திருகாப்பு அணிவித்தலும் அபிஷேகமும், ,ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் மேளதாளங்கள் முழங்க கரகாட்டம் மற்றும் வான வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ செல்லியம்மன் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் நாட்டாண்மை முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வி ரவி கவுண்டர் ஊர் நிர்வாகம் ஆர் ஜெகதீசன் கவுண்டர் 100 நெ பீடி பிரான்ச் ஆர். ராஜசேகர், அழகிரி, ரவி ,அரசு ,நாராயணன், மற்றும் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.



