தருமபுரி மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட செயலாளர் கோ. ராமதாஸ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சி.கிருபானந்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் பி.எம். ராஜாமணி,மாவட்ட துணை செயலாளர் கே.ஆதிமூலம், தலைமை செயற்குழு உறுப்பினரும், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளருமான மொ.குமரவேல், முன்னாள் தீர்மானக் குழு உறுப்பினர் வஜ்ஜிர வேல், ஒன்றிய செயலாளர் கே.முனுசாமி,என். என்.காந்தி,டைலர் சரவணன்,வேம்பை மா.முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,பாபு, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் சங்கர், கல்லடிப்பட்டி சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



