தஞ்சாவூர்.ஜூலை 14
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு அரசின் கலை பண் பாட்டுத்துறை சார்பில் தஞ்சாவூர் சங்கமம் நம்ம ஊரு திருவிழா மற்றும் தஞ்சாவூர் உணவு திருவிழா தொடங்கியது.
விழாவை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், கும்பகோணம் மேயர் சரவணன் உள்ளிட்டோர் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர்.
மேலும் இசை, நாடகம், ஓவியம் உள்ளிட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி, கலை வளர்மணி, கலை நன்மணி கலை முதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. தொடர் ந்து அந்தோணி தாஸ் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து சனி ஞாயிறுக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற விழாவில் ஏறத்தா ழ 100 உணவு அரங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளது .இதில் பாரம்பரிய உணவு வகைகள் முதல் இன்றைய கால உணவு வகைகள் வரை இடம் பெற்றுள்ளன.
மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்த ஏறத்தாழ 500க்கும் அதிகமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற் கும் நையாண்டி, மேளம், கரகாட்டம், தப்பாட்டம் ,பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம் ,கோலாட்டம், பம்பையாட்டம், மல்லர் கம்பம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பொம்மலாட்டம் ,நாட்டுப்புற ஆடல் பாடல் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சி கலை விழா நடைபெறு கிறது.
தொடக்க விழாவில் ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட நிர்வாக அலுவலர் தியாகராஜன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ,மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்