திருப்பத்தூர்:மார்ச்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் MGNRGS தார் சாலை பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
எலவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மைக்கா மேடு பகுதியான அம்மன் கோயில் முதல் ரேணு வட்டம் மயானம் வரை புதிய தார்சாலை அமைக்க MGNRGS திட்டத்தின் கீழ் ரூபாய் 16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி பணியினை பேசுகையில் துவக்கி வைத்து பேசுகையில்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் நகர்ப்புறங்கள் மட்டும் என்றில்லாமல் கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை விளைவாக செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை ஒதுக்கீடு செய்து கிராமப்புற பெண்கள் சுயமாக தொழில் தொடங்க பல்வேறு வங்கி கடன் வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. சிறு சிறு கிராமங்களில் முறையான சாலை வசதிகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய தார் சாலை பணியினை துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எலவம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்ட கவுன்சிலர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்,
கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் வாழ்த்தி பேசினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், ஒன்றிய கவுன்சிலர் சண்முகப்பிரியா கமலநாதன், துணைத் தலைவர் ஆனந்தன், ஊராட்சி எழுத்தர்கள் ராஜேஷ்குமார், ராஜமாணிக்கம், திமுக கிளை செயலாளர்கள் பெருமாள், வடிவேல், வார்டு உறுப்பினர் மாலினி நந்தனார், விவசாய அணி ஒன்றிய துணை அமைப்பாளர் சாந்த சீலன், மாவட்ட பிரதிநிதிகள் ஆசிரியர் ஆர்வில், சக்கரை, ஆதிதிராவிடர் நலக்குழு பாலு, விளையாட்டு மேம்பாட்டு அணி சுகுமார், வர்த்தக அணி அமைப்பாளர் குமரேசன், சமூக ஆர்வலர், தொழிலதிபர் நெப்போலியன், திமுக தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் தமிழ் குடிமகன், கந்திலி மத்திய ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ், தேர்தல் பணிக்குழு மற்றும் துணை அமைப்பாளர் யுவராஜ், மாணவர் அணி விஜய பிரகாஷ் மற்றும் எழவு பட்டி ஊராட்சி கிளைக் கழக முன்னோடிகள், கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத அப்பகுதி மக்கள் தற்போது தார் சாலை பணி நடைபெற இருப்பதால் பொதுமக்கள் பலரும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் MGNRGS பொறுப்பாளர் விவேகானந்தன் நன்றியுரை வழங்கினார்.