பீகார் மாநிலத்தில் தேசிய அளவிலான சப் ஜூனியர் பெண்கள் கபடி போட்டி கடந்த மார்ச் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைப்பெற்றது. இதில் 28 மாநிலத்தை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. தமிழகத்தை சேர்ந்த பெண்கள் அணியும் பங்கேற்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் கபடி அணியினருக்கு செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் 13 நாட்கள் சிறப்பு பயிற்சி ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் வழங்கப்பட்டது. சிறப்பாக பயிற்சியின் காரணமாக தமிழக கபடி வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டியில் தங்கள் திறமைகளை வெளிப்படித்தி தமிழ்நாட்டிற்காக சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக பெண் கபடி வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில்
தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வெற்றி பெற்று சென்னை திரும்பிய வீராங்கணைகளுக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கபடி கழக செயலாளர் மு.வேல்முருகன், செங்கல்பட்டு மாவட்ட கபடி கழக தலைவர் சிவமணி ஆகியோர் மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற உள்ள தமிழக பெண்கள் கபடி அணியினருக்கு செங்கல்பட்டு மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட செயலாளர் மு.வேல்முருகன், தலைவர் சிவமணி ஆகியோர் சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்தனர். அதன் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் சென்னை ஒ.எம்.ஆர்.சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 13 நாட்கள் பெண்கள் கபடி அணியினருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது. 13 நாட்கள் சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்ட
வீராங்கணைகள் தேசிய அளவிலான போட்டியில் கலந்து சிறப்பாக முடிந்தது. கொண்டதால் விளையாட அதன் காரணமாக பீகாரில் நடந்த போட்டியில் தங்களது சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முடிந்ததாக தமிழக அணியிம் கேப்டன் காவ்யா தெரிவித்துள்ளார். மேலும் போட்டியில் வெற்றி பெற்று சென்னை திரும்ப தாம்பரம் சட்டமன்ற எஸ்.ஆர்.ராஜா உறுப்பினர் தனது சொந்த நிதியில் இருந்து அனைத்து வீரர்களுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்தகாவும் தமிழக அணியின் கேப்டன் காவ்யா கொண்டார்.