தேனி பிப்ரவரி 9
தேனி மாவட்டம்
2024-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்
தமிழ்நாடு அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள்/அமைப்புகளை சார்ந்த 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் காசோலையும் வழங்க உள்ளது.
இவ்விருதிற்கு விண்ணப்பிக்க சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள்/பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு, சூழலியல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கை, கடற்கரைசார் பகுதிகள் பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களில் தங்கள் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள்/குடியிருப்போர் நலச் சங்கங்கள்தனிநபர்கள்/உள்ளாட்சி அமைப்புகள்/தொழிற்சாலை அமைப்புகளை சார்ந்தோர் பசுமை முதன்மையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை முதன்மையாளர் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனிநபர்கள்/நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.04.2025.
மேலும் கூடுதல் தகவல் தேவைப்படுவோர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தேனி அவர்களை நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,