தஞ்சாவூர் மே 10.
தஞ்சாவூர்தென்னகப் பண்பாட்டு மையத்தில் சதங்கு நாதம் கதை கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சி 10ஆம் தேதி தொடங்குகிறது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ளார்
இதுகுறித்து தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் வளாகத்தில் சலங்கைநாதம் கலை விழா மற்றும் அகில இந்திய கைவினை கண்காட்சியும் 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது
இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் நடன வகைகள் பல்வேறு மாநில கைவினைப் பொருள்கள் மற்றும் பல மாநில உணவுகள் அரங்குகள் பிற்பகல் 3. 30 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி மட்டும் விற்பனை நடைபெறும்.
விழாவில் நாட்களில் கலை நிகழ்ச்சிகள் தினம் மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 வரை தென்னக பண்பாட்டு மைய திறந்த வெளி கலையரங்கில் நடைபெற உள்ளது.
விழாவில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி , சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் , மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்
நிறைவு நாளில் தமிழக கவர்னரும், தென்னகப் பண்பாட்டு மைய தலைவருமான ஆர்.என். ரவி பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics