நீலகிரி மாவட்டம் என்றாலே இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலா மாவட்டமாகும் இங்கு வருடா வருடம் நடக்கும் மலர்கண்காட்சி பிரசித்தி பெற்றதாகும்
இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். மலர் காட்சி மட்டுமின்றி இங்கு விளையும் மலை காய்கறிகள் ஊட்டி வர்க்கி, நீலகிரி தைலம் ஹோம் மேட் சாக்லேட் என்கிற இனிப்பு வகைகளை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கு, ஊட்டி வர்க்கி நீலகிரி சாக்லேட் போன்றவைகளுக்கு புவிசார் தர குறியீடு வழங்க பலர் கோரி வருகின்றனர்.
குடிசை தொழிலைப் போல ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் பல இருந்தாலும் நீலகிரியில் உள்ள சுஜி சூர்யா என்ற சாக்லேட் நிறுவனம் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிறுவனத்தை பாலு என்பவர் நிர்வகித்து நடத்தி வருகிறார். சமூக நளனில் அக்கறையுள்ள இவர் அவ்வப்போது பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் குறிப்பாக கொரோனா காலத்தில் ஊட்டி பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு உணவுப்பொருட்கள் காய்கறிகளை வழங்கி உதவி செய்தார் இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி இவரது சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உழைத்தால் உயரலாம் என்ற உன்னத நோக்கம் கொண்ட வார்த்தைக்கு சொந்தக்காரரான இவர் தன் நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.