தருமபுரி ஏப்: 30
தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து மருத்துவ அலுவலர்களுடனான தணிக்கை ஆய்வு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூடுதல் கூட்டறங்கில் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கி பேசினார்கள். கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது .தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய் இல்லாத பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பால் வங்கி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து எதிர்ப்பு சக்தியுள்ள தாய்பால் பெற்றுக் கொள்ளலாம். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிந்து தெரிவித்தது தொடர்பாக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் மீது புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் சுத்தமாகவும் ,எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் செயல்படுகிறதா என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் இந்த வருடத்தில் ஏற்பட்ட மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணம் குறித்து தணிக்கை செய்து காரணங்களை ஆராய்ந்து அதை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மரணம் ஏதும் நடக்காத வகையில் கவனத்துடன் செயலாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இத்த கூட்டத்தில் மருத்துவபணிகள் இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுதுறை தலைவர்கள், குடும்ப நல துணை இயக்குனர் ,முதன்மை மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் , தனியார் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் குழந்தை நல மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.