சென்னை , பிப்- 17, காணக் கற்றல் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது .
இக்கண்காட்சி தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் டாக்டர் எம்ஜிஆர் – ஜானகி கலையியல் மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த புகைப்பட கண்காட்சியில் 14 மாணவிகள் பங்கு கொண்டனர் .
இந்த புகைப்பட கண்காட்சி மாணவிகளின் அன்றாட அனுபவங்களை கொண்டு அதை புகைப்படம் வாயிலாக காட்சிப்படுத்தியிருந்தனர் .போட்டோ சவுத் ஏசியா அமைப்பின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த ” படைப்புக்கான தொழிற்சார் பட்டறை ” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு எம் .ஜி .ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது, டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலையியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வி .சி. சாந்திலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
மேலும் ட்ராட்ஸ்கி மருது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- இந்த வித்தியாசமான அரிதான புகைப்பட கண்காட்சி டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கள் அனுபவ புகைப்படங்கள் கண்காட்சியாக காட்சிப்படுத்தியது பார்வையாளர்களின்
கவனத்தை ஈர்த்ததை நான் உணர்ந்தேன். இவர்கள் தேர்ந்த புகைப்பட கலைஞர்களாக உருவெடுக்க இந்த நிகழ்வு மிக முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .