கோவை அக்: 20
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கிடையே தொழில்நுட்ப ஆராய்ச்சி போட்டிகள் 20 மணி நேர தொடர் பயிற்சி போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்று தங்களுடைய படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தானிஷ் அகமது கல்லூரி சார்பில் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மாணவர்களால் உருவாக்கப்பட்டு அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரை சார்ந்த மனித வள மேம்பாட்டு அதிகாரி ரேஷ்மி மேனன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்விற்கு கல்லூரியின் தலைமை இயக்குனர் கே.ஏ.அக்பர் பாஷா அவர்கள் தலைமை வைத்தார். கல்லூரியில் தலைமைச் செயல் நிர்வாக அதிகாரி திரு.அ.தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கல்லூரி கணினி அறிவியல் பொறியியல் துறை தலைவர் முனைவர். நாதன் நன்றி உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கண்டுபிடிப்பு பற்றி மாணவர்களிடையே கேட்டபோது புதிய தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு தொழில்நுட்பங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம் அந்த வகையில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த தொழில்நுட்பமானது போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக தடுப்பதற்கான தொழில் நுட்பம் இதன் மூலம் போதைப்பொருள் முற்றிலுமாக தடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு இது முற்றிலுமாக உதவும் மேலும் கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவியிடம் கேட்டபோது உடல் ஊனமுற்றோருக்கான ஒரு புதிய கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளோம். இந்த கண்டுபிடிப்பானது கையுறையைப் போன்று நமது செய்கைகளை அவர்களுக்கு புரியும் வண்ணம் உருவாக்கியுள்ளோம். இதனால் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அவர்களுக்கான முன்னேற்றம் கிடைக்கும் என்று கூறினார். கல்லூரியின் சார்பில் நடைபெற்ற இந்த விழா ஆண்டுதோறும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார்.