நாகர்கோவில், நவம்பர் 22 –
கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவிகள் 14, 17, 18 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டனர்.
வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் சலோமி 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் முதலிடம், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் மூன்றாம் இடம். தனுஷா 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் முதலிடம். 50 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் இரண்டாம் இடம். அபிநயா 200 மீ தனி நபர் மெட்லி முதலிடம். கௌசிகா 100 மீ. 200 மீ.இரண்டாம் இடம். 14 வயது பிரிவில் ஆகாசினி 200 மீ. தனி நபர் மெட்லி மூன்றாம் இடம் பெற்றனர்.
மேலும் 17 வயது பிரிவில் இந்த நான்கு பேரும் 100 மீ. ஃப்ரீ ஸ்டைல் ரீலே மற்றும் 100 மீ. மெட்லி ரீலே போட்டியில் முதலிடம் பெற்று 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்று ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.
வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சக்தி மானிஷா ஆகியோரை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ஜெயராஜ், பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பெர்லா ஜெயந்தி, உடர்கல்வி இயக்குனர் காட்வின், உடற்கல்வி ஆசிரியர் விமலன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.


