அக். 14
திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி – பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ப்பு –
பார்வையற்ற இளைஞர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி அசத்தல்.
திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில்
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.கே சிலம்பம் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
இந்த சிலம்பாட்ட போட்டியில் சிவகங்கை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து
500 – மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு
தனித்திறமை போட்டி,
தொடு போட்டி பிரிவுகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்இந்த சிலம்பம் போட்டியில் 5 வயது முதல் பெரியவர்கள் வரை உள்ளவர்களுக்கு தனிதனியாக
சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பையும் கேடயமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன,
முன்னதாக இரண்டு கண்கள் தெரியாத பார்வையற்ற இளைஞர் அகிலேஷ் (20) என்பவர்
8 மாத சிலம்பம் பயிற்சி பெற்று இந்தபோட்டியில்
சிலம்பம் சுற்றி
தனது திறமை வெளிபடுத்தினார்
இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கோப்பையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கப்பட்டன.



