திண்டுக்கல்லில் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC இட ஒதுக்கீடு பெற்றிட வலியுறுத்தி மாநில மாநாடு நிகழ்ச்சி திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள பாஸ்கு மைதானத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயரும், தமிழக ஆயர் பேரவையின் BC/MBC/DNC பணிக்குழு தலைவருமான P.தாமஸ் பால்சாமி தலைமை தாங்கி பேசியதாவது , மதத்தின் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுவது அநீதியாகும். இந்திய அரசியலமைப்பு ஒருவர் எந்த மதத்தையும் சார்ந்து இருக்கலாம் என்ற உரிமையை வழங்கி உள்ளது. அப்படி இருக்கும் போது மதத்தின் பெயரால் உரிமைகள் மறுக்கப்படுவது அந்த மக்களை வஞ்சிப்பதற்கு சமமாகும். தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் கிறிஸ்தவ வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு கிடைக்க வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்ற வில்லை எனவே தேர்தலுக்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் எங்களது செயற்குழுவை கூட்டி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வோம் என பேசினார். திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மைக்குரு பேரருள்பணி T. சகாயராஜ் செயலக முதல்வர் பேரருள்பணி A.தாமஸ் ஜான்பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோ. ஆர்தர், A.ஜேசுதாஸ், விமல், K.ஜான்கென்னடி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பாடல் பாடினார்கள். மேட்டுப்பட்டி சௌந்தர் நற்செய்தி வாசித்தார். மேட்டுப்பட்டி அருள்பணி V. செல்வராஜ் இறைவேண்டல் செய்தார். திண்டுக்கல் மறை மாவட்ட BC/MBC/DNC பணிக்குழு செயலாளர் அருள்பணி S. அருள் ரூபேஷ் வரவேற்புரை ஆற்றினார். தமிழக ஆயர் பேரவையின் BC/MBC/DNC பணிக்குழு மாநிலச் செயலாளர் பேரருள்பணி A. சாம்சன் ஆரோக்கியதாஸ் கலந்து கொண்டு மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார். திண்டுக்கல் சமூக ஆர்வலர் S. நிக்கோலஸ் கிறிஸ்தவ வன்னியர்களின் இன்றைய பொருளாதாரச் சூழல் குறித்து பேசினார். பழனி அருள் பணி ஏ .எர்னெஸ்ட் அந்தோணிசாமி கல்வி வேலைவாய்ப்பில் கிறிஸ்தவ வன்னியர்களின் நிலை குறித்து பேசினார். திண்டுக்கல் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் இயக்க தலைவர் ச. ஜஸ்டின்திரவியம் அரசியலில் கிறிஸ்தவ வன்னியர்களின் நிலை குறித்து பேசினார். கடலூர் BC/MBC/DNC பணிக்குழு அருள்பணி எல்.ஜோசப் ராஜ் கிறிஸ்தவ வன்னியர்களின் சமுதாய நிலை குறித்து பேசினார். திண்டுக்கல் வழக்கறிஞர் ஜெனட் கிறிஸ்தவ வன்னிய பெண்களின் நிலை குறித்து பேசினார். தமிழ்நாடு கிறிஸ்தவ வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் V.ராஜசேகர், S ரொசாரியோ, A. அலோசியஸ், மாநில ஒருங்கிணைப்பாளர் அமலதாஸ், கொசவபட்டி அந்தோணி,
G. இருதயசாமி,C.ராஜாஜி பெர்னாட்ஷா, A1.ஜோசப் சேகர், தா.சுதாகர், மரிய புஷ்பம், A.அந்தோணிஆரோக்கியதாஸ், செ.அருள்ஜெரால்டு, ராஜா, G.சேவியர் துரைராஜ், P.அருள் சுந்தர்ராஜ், A.ஜான்பீட்டர், T.ஜோசப் தாஸ், எட்வின், T.மரிய ஆரோக்கியம், கஸ்பர் V.ஆரோக்கியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த மாநாட்டில் தீர்மானங்களான கிறிஸ்தவ வன்னியர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவளித்து வாழ்த்து தெரிவித்த தமிழகத்தின் சமூக தலைவர்களுக்கு இந்த மாநாடு மூலம் நன்றி தெரிவிப்பதோடு இந்த கோரிக்கையை நிறைவேற தொடர்ந்து ஆதரவை தர வேண்டும் தமிழகத்தின் பூர்வகுடி மக்களாக திகழும் வன்னியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் அவர்களது சாதியபடி நிலை மாறவில்லை பொருளாதார சூழலோ அல்லது சமுதாய நிலையோ மாறவில்லை எனவே கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி வேலைவாய்ப்பில் உரிய பங்கீடு வழங்க தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு பாதியார்கள், A.செபஸ்தியான், B.விஜயன், A.ஆரோக்கியசாமி, R.C. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த திண்டுக்கல் இரா.அந்தோணி, மதுரை சார்லஸ், இருதயராஜ், அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில்
அ.வெள்ளோடு அருள்பணி M. ஜஸ்டின் திரவியம் நன்றி கூறினார்.
வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC இட ஒதுக்கீடு பெற்றிட வலியுறுத்தி மாநில மாநாடு.



