ஈரோடு, மே 18 –
ஈரோடு கொள்ளுக்காட்டுமேடு பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. 9, 12, 17 மற்றும் பொது பிரிவு போன்ற 5 பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் 300 பேர் கலந்து கொண்டு விளையாடினர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டியை மாதா அமிர்தானந்தா மடத்தின் சீடர் நிகிலேஷ் அமிர்த சைதன்யா மற்றும் முன்னாள் எம் எல் ஏ ஆர் எம் பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பள்ளி மேலாளர் நிரஞ்சனா அமிர்த பிரானா பள்ளி முதல்வர் ஜெய சித்ரா ஆகியோர் வரவேற்றனர். தமிழ் மாநில சதுரங்க கழக துணை செயலாளர் டாக்டர் ரமேஷ் சதுரங்க போட்டியை ஒருங்கிணைந்து நடத்தினார்.



