தஞ்சாவூர் அக்.10.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால் சோழன் கலையரங்கத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டங்கள் சார்பில் மாவட்ட அளவிலான களஞ்சியம் 79 டிகிரி இ என்கிற அஞ்சல் தலை கண்காட்சி தொடங்கியது.
இதன் தொடக்க விழாவில் தமிழ் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ,கடல் பசு பாதுகாப்பாகம் ஆகிய பொறிக்கப் பட்டசிறப்பு அஞ்சல் உரைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட அவற்றை சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்) கா அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) மாவட்ட வன அலுவலர் அகிலன் தம்பி, மத்திய மண்டல அஞ்சல் தலைவர் நிர்மலா தேவி, பல்கலைக்கழக பதிவாளர் (பொ)தியாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கண்காட்சியில் அஞ்சல் நிலைய ம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையிலான அஞ்சல் தலைகள் சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் தலை சேகரிப் பாளர்கள், மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு துறை வல்லுநர்களின் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், வினாடி வினா போன்றவை நடத்தப்பட்டன. பள்ளி மாணவர் களுக்கான பல்வேறு அரங்குகளும் ஆதார் மற்றும் திருத்த சேவைகளு க்கான அரங்குகளும், அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டு ள்ளன.
தொடக்க விழாவில் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப் பாளர்கள் கே தங்கமணி (தஞ்சாவூர்) சி கஜேந்திரன் (கும்பகோணம்) எஸ் ரகு ராமகிருஷ்ணன் (பட்டுக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்