By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
Blogகிருஷ்ணகிரிமாவட்டம்

மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!

Last updated: May 14, 2025 5:52 pm
May 14, 2025
42 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மே. 14

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி 2022-2023 ஆண்டிற்கான வளர்ச்சி நிதியின் கீழ் அப்போதைய கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் முயற்சியில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு மக்களுக்கு குடிநீர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர், ஐந்து ரூபாய்க்கு 20 லிட்டர் என்கிற விகிதாச்சாரத்தில் தானியங்கி இயந்திரத்தின் மூலம் குடிநீரை பெற்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சமீப காலமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பேருந்து நிலைய வியாபாரிகளால் உடைக்கப்பட்டு தற்பொழுது செயலற்று உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் குடிநீர் கிடைக்காமல் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் நிலை உள்ளது.

எனவே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்த தானியங்கி சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் தற்போது உடைக்கப்பட்டு சேதம் அடைந்து காணப்படுகிறது.

இதனை சமூக ஆர்வலரும் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் நூதன முறையில் உடலில் காலி குடிநீர் பாட்டில்களை கழுத்தில் மாட்டிக் கொண்டு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பார்வையிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சந்திரமோகன் அவர்கள் பேசுகையில், கிருஷ்ணகிரி ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இவர்கள் அன்றாடம் இந்த தானியங்கி குடிநீர் இயந்திரத்தை பயன்படுத்தி குடிநீரை எடுத்துச் சென்று இருந்த நிலையில் தற்பொழுது சேதம் அடைந்து பாலடைந்த நிலையில் பரிதாபத்துக்குரிய வகையில் அந்த குடிநீர் நிலையம் காணப்படுகிறது.

இது சம்பந்தமாக நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை இது நாள் வரை எடுக்கப்படவில்லை எனவே மக்கள் நலன் கருதி.

மனிதநேயமிக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இதன் மீது கவனத்தை செலுத்தி தானியங்கி குடிநீர் நிலையத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சட்டமன்ற தொகுதிக்கு ஒரு கலைஞர் நூலகம்
கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த கோரி!!
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா
விளையாடும் பொழுது மயங்கி விழுந்து பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.

May 21, 2025
91 Views
அல்சைமர் நோய் தடுப்புசர்வதேச ஆராய்ச்சி
திருவட்டாறு அருகே நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
புதிய வகை பலாக்கன்றுகளை நடவு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account