தருமபுரி மாவட்டம் ,நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் ,அலங்காரம் நடைபெற்றது. எலுமிச்சை பழ தீபம், தேங்காய் தீபம், நெய் தீபம், ஷாம்பூசணிக்காய் தீபம் ஆகியவை ஏற்றி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் .கோயில் நிர்வாக சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



