நாகர்கோவில் – அக்- 04,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலசங்கரன்குழி முதல் நிலை ஊராட்சியில் அக் – 02 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றம் அருகில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மேலசங்கரன் குழி ஊராட்சியை நாகர்கோவில் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என மேலசங்கரன்குழி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சியோடு இணைக்க முற்படும் போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நிறுத்தப்படுகிறது. என அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர் . அதனை தொடர்ந்து தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை குறைப்பு திடம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவது அவர்களுக்கு முகாம்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது .அதனைத் தொடர்ந்து பெண்கள் மட்டும் குழந்தைகளுக்கான சமூகத் தீமை நிராகரித்து உறுதிமொழி மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழிகளை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரமேஷ், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் அய்யப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜான்சிலின் விஜிலா, ஒன்றிய கவுன்சிலர் ஜெயா, ஹேமா, வார்டு உறுப்பினர்கள் இந்திரா குமாரி, ஜெயசீலி, ராதிகா, ஜெயஸ்ரீ, சந்திரா, விஜயகுமார், மேரி வைலட் ரெஜிலா, நாதன் தங்கராஜா, இராமசுவாமி, செல்வின் கிற்ஸ்டோபர் , மரியபுஷ்பம் , புஷ்பலதா , சாந்தி, மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.



