நாகர்கோவில் – ஜூலை – 01 ,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சங்கரன் குழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞரின் கனவு இல்லம் 2024-25 மற்றும் பழுதடைந்த வீடுகளின் பயனாளிகள் , கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள ஓலை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு பதிலாக புதிய காங்கிரட் வீடுகள் கட்டுவதற்கு பயனாளிகளின் விபரம் ஆகிய கணக்கெடுப்புகளில் தகுதியான பயனாளிகளின் பெயர்கள் மற்றும் ஆர் ஆர் எச் திட்டத்தின் கீழ் 2001 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசின் திட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள வீடுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கம் செய்வதற்கு தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்களை இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பித்து கிராம சபா ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஷீலா,
மற்றும் மேல சங்கரன் குழி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ், மற்றும் வார்டு உறுப்பினர்கள் இந்திரா குமாரி, ஜெய சீலி, ராதிகா, ஜெய ஸ்ரீ, சந்திரா, விஜயகுமார், மேரி வைலட்ரெஜிலா, நாதன், தங்க ராஜா,ராமசாமி, செல்வின் கிறிஸ்டோபர், மரிய புஷ்பம், புஷ்பலதா ,சாந்தி உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.