திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் அரும்பியதும், விரும்பியதும் நிகழ்ச்சி ஏப்ரல், மே மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி
திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன்
முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு இந்நிகழ்ச்சியின் முன்னதாக ஏப்ரல்,மே மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா விதமாக பிறந்தநாள் மற்றும் மணநாள் கேக்குகளை வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.பின்னர் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ?வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? என்ற தலைப்பில் Rtn. M. மதன முனியப்பன்,Rtn.M. செல்வகனி , Rtn.D. ரெங்கையா மூன்று பேரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வருத்தமா ? என்ற தலைப்பில் Rtn.M. குமரப்பன்,Rtn.S. சண்முகம்,Rtn.K. தயாளன் மூன்று பேரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு நடுவராக Rtn.M. பாலசுந்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு கருத்துக்களை பரிமாறி முடிவில் ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமே என்று தீர்ப்பளித்தார்.
இந்நிகழ்வில்
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
ஆன்லைன் வர்த்தகம் மக்களுக்கு வரமா ? வருத்தமா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics