கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்தம் குடும்பத்தைச் சார்ந்த 37 நபர்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களாக வழங்கினர். பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர்கள் நல தொகுப்பு நிதியிலிருந்து 7 முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு பட்டம் மற்றும் பட்டய படிப்பிற்காக ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகையும், 2 முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.23 ஆயிரத்து 663 மதிப்பில் வங்கிக்கடன் வட்டி மானியமும், முன்னாள் படை வீரர் 1 நபருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் இராணுவ ஊக்க மானியம் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 93 ஆயிரத்து 663 மதிப்பில் காசோலைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள்,
முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர் லெப்.கர்னல்.ஆர்.பி.வேலு
ஓய்வு, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் .தமிழரசி,
மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் .ராமமூர்த்தி மற்றும் துறை சார்ந்த
அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.