திருப்புவனம்
மே 02
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலராங்கியம்
ஊராட்சி கீழராங்கியம் காலனி
கிராமத்தில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் தண்டிலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
கலந்து கொண்ட கிராம மக்கள்
முன்னிலையில் ஊராட்சி செயலர்
ஊராட்சியில்
2024/25 ஆண்டின் வரவு செலவுகளை முறையே எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து
கிராம மக்கள்
கத்திரி வெயில் காலம் என்பதால்
காவேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக மேற்கோண்டு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதன் பின்னர் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தின் போது
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும்
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சுகாதார அலுவலர்கள் பணியாளர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



