By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்

Last updated: October 4, 2024 11:11 am
October 4, 2024 20 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 03,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சியில் காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பொதுமக்களுக்கு

 கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல். 

 

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியம், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தெரு சமுதாய நலக்கூடத்தில் அண்ணல் காந்தியடிகளின் 156-வது பிறந்த நாளையொட்டி, நேற்று  நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், வளர்ச்சிதிட்ட பணிகள் குறித்தும், பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்கள்.

 

அதனைத்தொடர்ந்து கிராம மக்களிடையே மாவட்ட ஆட்சித் தலைவர்  அழகுமீனா  பேசுகையில்:- 

 

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2-ம் தேதியன்று ஒவ்வொரு கிராம ஊராட்சி பகுதிகளில் இதுபோன்ற கிராம சபைகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அதனைத்தொடர்ந்து தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம வறுமை குறைப்பு திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதார திட்டம், கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு திட்டம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவது. அவர்களுக்கு முகாம்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் குறித்தும், வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் குறித்தும். தூய்மை பாரத இயக்கம் மூலம் அனைத்து வீடுகளுக்கு தூய்மை காவலர்கள் சென்று குப்பைகளை மட்கும் மட்கா குப்பைகள் என தரம் பிரித்து வழங்குவது குறித்தும், மாகத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 

செண்பகராமன்புதூர் ஊராட்சியில் 17 குக்கிராமங்களில் மொத்தம் 6500-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 5 அங்கன்வாடி மையங்கள், 3 தொடக்கப்பள்ளிகள். 1 உயர்நிலைப்பள்ளி. 1 மேல்நிலைப்பள்ளி. 3 கல்லூரிகள், கால்நடை மருந்தகம், தபால் நிலையம், மின்சார வாரிய அலுவலகம், காவல்நிலையம், கிராம நிர்வாக அலுவலகம், வங்கிகள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள். அரசு மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளன. நம்முடைய ஊராட்சியை சார்ந்தவர்கள் பலர் வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட உயர்

பதவிகளில் உள்ளார்கள். செண்பகராமன்புதூர் ஊராட்சியில் மொத்தம் 41 சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 426 உறுப்பினர்கள் உள்ளார்கள்.

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தி வருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளை போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம்முடைய கடமையாகும். முக்கியமாக 13 அல்லது 14 வயது பிள்ளைகள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றனர். ஒவ்வொருவரும் முதலில் நண்பர்களோடு பொழுதுபோக்காகவும், விளையாட்டுத்தனமாகவும் போதைப்பொருட்களை உட்கொள்ள தொடங்கி தொடர்ந்து அப்போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றார்கள். ஒரே ஒரு தடவை, இன்று ஒரு நாள் மட்டும் என்று எதார்த்தமாகவோ. வற்புறுத்தப்பட்டோ போதை பொருட்களை உபயோகிப்பதினால் போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர். எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அன்பாக சொல்லி போதைப்பொருட்கள் பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடைகளில் விற்க கூடாது என்று அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைகளில் போதைப்பொருட்கள் விற்பது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

நமது மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை

மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இரத்த வங்கி, போதிய மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள். அனைத்து உபகரணங்கள் கொண்ட அறுவை சிகிச்சை அறை, பிரசவ அறை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு வசதி, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்டு, 24×7 நேரமும் இயங்கி வருகிறது. கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்தே கருவுற்ற தாய்மார்கள் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 1000 நாட்கள் என்பது முக்கியமான காலமாகும். எனவே அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அம்மா குழந்தை நல பெட்டகம், 102 அரசு இலவச ஊர்தி வசதி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, 24 மணி நேர பிரசவ சேவை, அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். எனவே அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டுமென தெரிவித்துக்கொள்கிறேன்.

 

மேலும் நமது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதன் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு கல்வி திட்டங்கள் வாயிலாக நலத்திட்ட உதவிகள், மேற்படிப்பிற்கான இடஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க பெறுகின்றன. குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் படிப்பிற்கு 7.50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களும் தங்களது கனவான மருத்துவம் மற்றும் பொறியில் துறையில் சிறந்து விளங்க வழிவகை செய்கிறது. மேலும் புதுமைப்பெண் திட்டம். தமிழ்புதல்வன் ஆகிய திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் ரூ.1000 மாணவ மாணவியர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லமால் நான்முதல்வன் திட்டத்தின் வாயிலாக புதிய தொழில் முனைவோருக்கான தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் அனைவரும் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையிலும், பிள்ளைகளின் எதிர்காலம் சிறந்து விளங்கிட அரசுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகளின் தொழில்விருத்தியடையவும், பொதுமக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திடும் வகையில் தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளை நேரில் அணுகி அத்துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு

வரும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள். நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா  பேசினார்கள்.

 

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா. தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சமூக தீமை நிராகரிப்பு உறுதிமொழி மற்றும் எச்.ஐ.வி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து சமுதாய முதலீட்டு நிதி கடன் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1.40 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளும், நலிவுற்றோர் நிதி கடன் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.75,000 கடன் உதவிகள் வழங்கப்பட்டள்ளது.

 

நடைபெற்ற கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகமது நசீர், இணை இயக்குநர் (வேளாண்மை) ஆல்பர்ட் ராபின்சன். செண்பகராமன்புதூர் ஊராட்சிமன்ற தலைவர் கல்யாணசுந்தரம். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண்

(தோட்டக்கலைத்துறை), கீதா (வோளண்மை விற்பனை குழு). சில்வெஸ்டர் சொர்ணலதா (வேளாண் பொறியியல் துறை), மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்  ஜெயந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயமீனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாரதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயா. சேகர், வட்டார மருத்துவ அலுவலர் மர ராஜகுமார் உட்பட துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்

June 23, 2024 96 Views
தஞ்சாவூர் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வருடாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு
புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பறை
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?