மதுரை பிப்ரவரி 8,
மதுரையில் தைப்பூசம் முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மதுரை மாவட்டத்தில் தைப்பூச 2025 திருநாள் 11.02.2025 அன்று வருவதை முன்னிட்டு பொது மக்கள் அதிகளவில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. எனவே பயணிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை போக்குவரத்துக் கழகம் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்கள் மூலம் வழக்கமான வழித்தட பேருந்துகள் மற்றும் பிப்ரவரி 9 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை 990 சிறப்பு பேருந்துகள் மதுரை, விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, பொன்னமராவதி, தேனி, திண்டுக்கல், மற்றும் திருச்சியிலிருந்து பழனிக்கும் மேலும் பழனியிலிருந்து பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக மேற்குறிப்பிட்ட ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்போக்குவரத்து கழகம் மூலம் தைப்பூச 2025 திருநாளை முன்னிட்டு பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்காக காத்திருப்பதை தவிர்க்கவும், பயணிகளின் கடைசி நேர கூட்ட நெரிசலையும், கால நேர விரயத்தையும் தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https: //www.tnstc.in, TNSTC Mobile App செயலி மற்றும் இணைய சேவை மையம் வழியாக 3X2 Deluxe பேருந்துகளின் முன்பதிவு செய்து பயனடையுமாறு தெரிவித்துள்ளனர்.



