நீர்நிலைகளில் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தியால் இயங்கும் தானியங்கி உபகரணம்”!
கலசலிஙகம் பல்கலை மாணவர்கள் சாதனை!!
கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள்
பி. சக்தி சவ்பாமிகா,
டி. ஜெயவீர ரெட்டி,
என். சேவானந்த ரெட்டி,
எஸ். சண்முகலட்சுமி,
ஆர். சந்திர கமலி, ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி ” நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் சூரியசக்தியால் இயங்கும் தானியங்கி உபகரணம்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் பல்கலை நீச்சல் குளத்தில் உபகரணத்தை இயக்கி இலை, தழைகளை போன்ற மிதக்கும் கழிவுகளை சேகரித்து வெளியேற்றி நீச்சல் குளத்தை சுத்தம் செய்து காண்பித்தனர்.
இந்த உபகரணத்தில் 12 வோல்ட் சோலார் போர்டு, எம்பிபிடி மின் சக்தி அளவீடு, சக்தி சேமிக்கும் 12 வோல்ட், 8 ஆம்ப் பேட்டரி, மிதக்கும் கழிவுகளை எடுக்கும் கன்வேயர், ட்ரே, சென்சார்கள், சுயரோஸ்கோப், போன்றவற்றை கொண்டு வடிவமைத்தாக மாணவர்கள் கூறினர்.
மேலும் , கை தொலைபேசியை ஆன் செய்தவுடன் பாதை கண்டறிதல் அல்காரிதம் மூலம் இரண்டு கட்டைகள் மீது வைக்கப்பட்ட இந்த உபகரணம் மிதந்து திடகழிவுகள் ,இலை, தழை போன்ற நீரில் மிதப்பவைகளை கன்வேயர் மூலம் அகற்றி அதன் வழியாக பின்னால் இருக்கும் ட்ரேயில் சேகரிக்கிறது. ட்ரே நிரப்பியதும் ஒரு ஓரத்தில் இயக்கி கொண்டு வந்து கழிவுகளை வெளியே எடுத்து கொட்டிவிடலாம் என்று உபகரண இயக்கத்தை விவரித்தனர் மாணவர்கள்.
இந்த உபகரணம் செய்வதற்கு தோரயமாக 75,000 ரூபாய் செலவானது என்றும் பல்கலை தொழிற்சாலை உறவு அலுவலக முயற்சியால் சிட்டி யுனிவர்சிட்டி ஆப் லண்டன், உபகரணம் செய்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்கியுள்ளது.
பல நீர்நிலைகள் அசுத்தமாக இருக்கும் தற்போதைய நிலையில் உடனே சூரிய சக்தியால் இயக்கி சுத்தபடுத்துவதற்கு அத்தியாவசியமான உபகரணம் மக்களுக்கு பயன்படும் வகையில் செய்து சாதனை புரிந்த மாணவர்களையும் வழிகாட்டிய தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர். ராஜா கிருஷ்ணமூர்த்தி, அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்களையும் வேந்தர் முனைவர். கே. ஸ்ரீதரன், இனணவேந்தர் டாக்டர். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர் முனைவர். எஸ். சசிஆனந்த், துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வே. வாசுதேவன் ஆகியோர் பாராட்டினர்.