மதுரை ஆகஸ்ட் 20,
மதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் “தமிழ்ப் புதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மதுரை மாவட்டம் வரிச்சியூர் பாத்திமா மைக்கேல் பொறியியல் கல்லூரியில் உயர் கல்வி பயிலும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி (தமிழ்வழி) மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை ஆகியோர் உடன் உள்ளனர்.