நாகர்கோவில் நவ 27
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு சிலம்பம் ஆசான் அங்கீகாரம் மலேசியாவில் நடைபெற்ற சிலம்பம் பயிற்சி பற்றிய நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
மலேசியாவில் உலக சிலம்ப சங்கம் நடத்திய உலகலாவிய கலந்தாய்வு கூட்டம் மற்றும் கருப்பு பட்டை தரப்படுத்துதல் நிகழ்ச்சி நவம்பர் 23 மற்றும் 24- ஆகிய தினங்களில் கோலாலம்பூரில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை
நிறுவன தலைவர் மகா குரு. குருஜி முருகன் செல்லையா ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சிலம்பம் இந்திய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற நிர்வாகிகளுக்கு குரு,மகா குரு, ஆசிரியர்களுக்கு கருப்பு பட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது தமிழரின் பாரம்பரிய முறைப்படி மலேசியாவில் உள்ள 10 மலை முருகன் கோவில் சன்னதியில் பூஜை செய்து அனைவரும் சிலம்பம் ஆடி பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை கண்ட வெளிநாட்டினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக சிலம்பம் இந்தியா சங்கம் சார்பாக கர்நாடகா, தமிழ்நாட்டைச் சேர்ந்த திண்டுக்கல்,திருப்பூர், கோவை,கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர்,ஈரோடு,மதுரை,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்ட ஆசான் செல்வ சுந்தரம் (குரு), சுபாஷ், மைதீன் ராஜா ஆகியோர் கருப்புபட்டை, பயிற்சி,சான்றிதழ் பெற்று உலக அளவிலான சிலம்பம் ஆசான்கள் என அங்கீகாரம் செய்யப்பட்டனர்.