தாம்பரம்
சென்னை மாடம்பாக்கத்தில், மாடம்பாக்கம் ஐக்கிய நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு குடும்ப விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஐக்கிய நல சங்க தலைவர் எஸ்.அந்தோணி நாடார் தலைமை தாங்கினார். நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இ.எம்.சீனிவாசன் நாடார் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன, தமிழக பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் எர்னாவூர் நாராயணன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்த மாணவ மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்க பரிசினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் பேசிய தமிழக முன்னா பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ரஜன் கூறும்போது, காமராஜர் வழியில் தான் பதவியின் மீது ஆசை இல்லாமல் தன்னுடைய செல்வாக்கான ஆளுநர் பதவியை கூட துறந்ததாகவும் தெரிவித்தார். நாடார் சமூகம் என்றாலே உழைப்பு பெயர் பெற்ற சமூகம் அந்த சமூகத்தில் இருந்து வந்தநான் உழைப்பால் தான் உயர்ந்துள்ளேன் என தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் பேசுகையில், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காமராஜரையும், நாடார் சமூகத்தை பெருமை படுத்தும் விதமாக இருமுறை என்னை கல்வி துறை அமைச்சராக நியமித்தார் என பெருமிதம் கொண்டார்.
இந்தநிகழ்ச்சியில் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் நாடார், எம்.எல்.ஏ.பிரபாகரராஜா, பாஜக ஒ.பி.சி. அணி துணை தலைவர் ராதாகிருஷ்ணன், அன்னைவேளாங்கண்ணி கல்வி குழும தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாடம்பாக்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துப்கொண்டனர். இறிதியாக அனைவருக்கும் பரிசு பொருள் மற்றும் அறுசுவை உணவும் மாடம்பாக்கம் ஐக்கிய நாடார் சங்கம் சார்பில் வழஙகப்பட்டது.