கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தொகுதி -4 ல் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 தேர்வாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் அவர்களிடம் பணி நியமன ஆணைகளை காண்பித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) .ராமஜெயம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



