கன்னியாகுமரி அக்டோபர் 31
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவுப்படி கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால்கனி, ஐயப்பன் ஆகியோர் கன்னியாகுமரி சர்ச் ரோடு மற்றும் அஞ்சுகிராமம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 18 வயதிற்கு குறைவாகவும், ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 டெம்போ,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
பின்னர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பபட்டது.
மேலும் 280 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.