நீலகிரி. மார்ச். 13
ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெறாத கட்டிடங்ளுக்கு இன்று முதல் சீல் வைக்கும் பணி துவங்கியது முதல் கட்டமாக கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது….
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் இருந்த ஊராட்சி தலைவர்கள் அனுமதி இல்லாமல் வீடுகள் மற்றும் கடைகள் வனிக வளாகங்கள் கட்ட பல லட்சங்களை மறைமுகமாக பெற்றுக்கொண்டு பணிகளை தொடர வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர் இதனால் பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்த்தவர்கள் சொகுசு விடுதிகள் கட்ட கட்டுமான பணிகளை தொடர்ந்தனர் தற்போது காட்சி மாறியது பணம் வாங்கிகொண்டு வாய்மொழி உத்தரவு வழங்கிய. பல ஊராட்சி தலைவர்கள் பதவி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர் தற்போது உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் பவ்யா தண்ணீரு பழைய பைலை தூசி தட்டியதால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடடங்களை கண்டு பிடித்து அதிகாரிகள் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார் சம்மந்தப்பட்ட ஊராட்சி செயல் அலுவலர்கள் முறையாக அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு முண்று நோட்டீஸ் வழங்கி உள்ளனர் இன்று முதல் அதிகாரிகள் அனுமதி பெறாத வீடுகள் வணிக வளாகங்கன் கடைகள் மற்றும் காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் பணியை துவங்கினர் முதல்கட்டமாக உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட. கரிமரா ஹட்டி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட. தனியார் சொகுசு தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி

Leave a comment