மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடு துறையை அடுத்துள்ளது அரங்க குடி மற்றும் வடகரை பள்ளிவாசல்கள். அரங்குடியில் ரமலானை முன்னிட்டு பள்ளிவாசலில் 500 க்கு மேற்பட்ட இஸ்லாமிய சிறப் தொழுகை நடத்தினர். தொழுகையை முன்னாள் முத்தவல்லி S.M. சம்சுதின் மற்றும் குட்டி ராஜா சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடகரை பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகையை முடித்து வந்த SDPI கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதி பொருப்பாளர் K.சம்சுதின் தலைமையில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்தும், SDPI தேசிய தலைவர் பைஜியை விடுதலை செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர் இதில் பொதுக்குழு உறுப்பினர் நவாஸ்கான் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்



