ஊட்டி. ஜன. 24
அவ்வப்போது வான்வெளியில் இயற்கை பல சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. இந்த வாரம் செவ்வாய், வெள்ளி, சனி,வியாழன் ஆகிய நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் ஒரு அபூர்வ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுசம்பந்தமாக தமிழ்நாடு அறிவியல் இயக்க நீலகிரி மாவட்ட கருத்தாளர் ராஜூ அவர்கள் ஊட்டி பள்ளி மாணவர்களிடையே கலந்தாய்வு சந்திப்பு நடத்தி வானியலில் நடக்கும் நிகழ்வு குறித்து அறிவியல் சார்ந்த கருத்துகளை தெரிவித்தார் ஊட்டி அரசு மேல் நிலை பள்ளியில் நடந்த நிகழ்வில் தலைமையாசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். குறிப்பாக வரும் புதன்கிழமை விடியற்காலையில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமையும். இது இயற்கையின் ஒரு அபூர்வமான நிகழ்ச்சியாகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. ஒரே நேர்கோட்டில் எப்பொழுதும் சுற்றி வராது. இந்த நிகழ்ச்சி நடைபெறும். இதனைக் குறித்து சில சமூக வலைத்தளங்களில் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக ஒரு வீடியோ பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து கோள்களிலும் ஒரே நேர்கோட்டில் வருவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்ச்சி. அது தற்சமயம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஒரே நேர்கோட்டில் வரும் வானியல் குறித்து ஜோதிடர்கள் கூறுவது அறிவியல் பூர்வமானது அல்ல. ஜோதிடர்கள் சூரியனையும் நிலாவையும் கோள்கள் என கூறுகின்றனர். சூரியன் ஒரு நட்சத்திரம். நிலா ஒரு துணைக்கோள். இதுவல்லாமல் ராகு, கேது என்ற இரண்டு கோள்களை இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. ஜோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன், போன்ற கோள்கள் எல்லாம் வருவதில்லை. இன்றைய வானியல் சூரியனை சுற்றி வரும் கோள்கள் மட்டுமல்ல நட்சத்திரங்கள், பால்வெளிகள், நட்சத்திரம் மண்டலங்கள், பிரபஞ்சம் என விரிந்து செல்கிறது. மேலும்ஸ்ட்ரிங் தியரி எனப்படும் அறிவியல் கோட்பாடு நம் பிரபஞ்சம் மட்டுமல்ல இது போன்ற கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு வகையான இயற்பியல் விதிகள் செயல்படலாம் என நவீன அறிவியல் கூறுகிறது. மக்கள் மூடநம்பிக்கைகளை விட்டு கோள்களை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அறிவியல் விளக்கம் அளித்தார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.