போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்ற மாண்புமிகு தமிழக முதல்வரின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு தமிழக அரசுக்கு துணைநிற்போம், காவல்துறைக்கு கரம் கொடுப்போம் என்கிற அடிப்படையில்
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் தொடங்கி கோவில்பட்டி வரை காவல்துறையோடு இணைந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் ஐந்து மாதங்களில் சுமார் 25க்கும் மேற்பட்ட போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை சமூக நலன் கருதி சிறப்பாக நடத்தியுள்ளது. இளைஞர்களால் மட்டுமே நல்லதொரு ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்க முடியும் என்ற துணை முதல்வரின் வழிகாட்டுதழின் படி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டுள்ளது. அதன்பொருட்டு தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் கௌரவத்தலைவர் எம்.ஏ.தாமோதரன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை சந்தித்து 2023 – 2024 ம் ஆண்டுக்கான கிரீன் சாம்பியன் விருது பெற்றமைக்கு வாழ்த்துப்பெற்றார்.அப்பொழுது தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மேற்கொண்ட போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு புகைப்பட ஆவணங்களை பொறுமையாக பார்த்த எஸ்பி ஆல்பர்ட் ஜான், காவல்துறையோடு இணைந்து சமூக அக்கறையுடன் மேற்கொண்ட தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மகத்தான மனிதம் காக்கும் செயலை வெகுவாக பாராட்டினார். உடன் தலைமையிடத்து
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உடனிருந்தார்.



