திண்டுக்கல் மே:28
திண்டுக்கல் மாவட்டம், வேலாம்பட்டியில் ஒய்நியூ மற்றும் அஸ்பயர் நிறுவனத்தின் சார்பாக மாலை நேர பயிற்சி மைய மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் ஆசிரியர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாலை நேர பயிற்சி மைய ஆசிரியை தீபா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீமீனாட்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் சண்முகம், வேலாம்பட்டி ஆசிரியை செல்வி, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர் ரேணுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சிகளை ந.சுப்ரமணியன் தொகுத்து வழங்கினார். மேற்பார்வையாளர்களாக சௌந்தரபாண்டியன், கங்காதரன்,அஜித், முத்துசாரதி ஆகியோர் கலந்து கொண்டு மேற்பார்வை செய்தனர். அறிவியல் கண்காட்சி மற்றும் வினாடி – வினாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாலை நேர பயிற்சி மைய ஆசிரியைகள் ஜெயந்தி, கயல்விழி,திவ்யா தன்னார்வலர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.
மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் வினாடி – வினா போட்டி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics