கிருஷ்ணகிரி,அக்.11- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஆர். ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக சரஸ்வதி படத்தை வைத்து அலங்காரம் செய்து வெள்ளம் பொறி கல்லை பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களை வைத்து பூஜை செய்து அதை படையலிட்டு பொது மக்களுக்கு பொறி கல்லை வெள்ளம் ஆகியவை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சிவசங்கர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics