கோவை டிச:11
கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் காந்திபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தெளலத் நிஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி மரக்கன்றுகளை நட்டார். பசுமை தொடர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் பிரகாஷ், பாக்கியலட்சுமி, சௌந்தர்ராஜன், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, போக்குவரத்து தலைமை காவலர் சண்முகமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பசுமை தொடர்ச்சி அறக்கட்டளையின் சார்பாக கோவை மாநகரில் கிராஸ் கட் ரோடு 100 அடி ரோடு ராம் நகர் டாடாபாத் வடகோவை சிவானந்தா காலனி காந்திபுரம் ஆறு முக்கு சித்தாபுதூர் கணபதி வேடப்பட்டி சாலை மேட்டுப்பாளையம் சாலை கோவை மாநகரப் பகுதியில் பசுமையாக்கும் நோக்கத்துடன் 418 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
பசுமை அறக்கட்டளை நிறுவனர் கூறுகையில்நம் பூமியும் இயற்கையும் மனித வாழ்வதற்காகவே அனைத்து உயிர்களும் வாழ்வதற்காகவே இருக்கிறது நம் இந்த பூமிக்கு கடன் பட்டிருக்கிறோம் நம்மால் இந்த பூமிக்கு ஒரு மரக்கன்று நடவு செய்து நம் வாழும் இந்த பூமிக்கு நன்றி கடனை ஒவ்வொரு மனிதர்களும் செய்வோம் என்று கூறினார்.