சென்னை, நவ-12, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலச் செயலாளார் கலைவாணன் , மாநிலப் பொருளாளர் செல்வசுந்தரி, மாநில துணைத்தலைவர்கள் செந்தூர் ஜெயந்தி, முத்துச்செல்வி, மாநில இணைச்செயலாளர்கள் புவனேஸ்வரி, தீபா, கனகராஜ், செயற்குழு உறுப்பினர்கள், சீனிவாசன், தானப்பன், அண்ணபூரணி, ஜான்சி, ரமேஸ், ரேகா, மீனாட்சி உள்ளிட்ட மாநில முழுவதிலுமிருந்து 2000க்கும் மேற்பட்ட பெண் பணியாளர் கலந்து கொண்டனர்.
மாநிலத்தலைவர் ஜெகதீஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். பணியாளர்களின் எதிர்கால நலன் கருதி வருங்கால வைப்பு நிதி. காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் முதலான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கு ஆர்பாட்டம் நடை பெறுகிறது.
இத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கீழ் செயல்படுகிறது. எங்கள் பணி அனைத்து துறைகளிலும் தொடர்புடையது. குறிப்பாக உள்ளாட்சி , சமூக நலன், மகளிர் மேப்பாடு, சுகாதாரம் ஊரக துறை என பல்வேறு பணியை செய்து வருகிறோம்.எங்களுக்கு பணிச்சுமையும் அதிகம் . எங்கள் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று அவர் அவர் தெரிவித்தார்.



