சிவகங்கை:ஜன:27
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில், நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 105 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் வழங்கினார்.
இவ்விழாவில், மணிமேகலை விருது வழங்கப்படும் 09 சமுதாய அமைப்புக்களுக்கு ரூ.04.00 இலட்சம் மதிப்பீட்டிலான விருது தொகைக்கான காசோலையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1,08,159/- மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களும், முன்னாள் படை வீரர் நலத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் மொத்தம் ரூ.50,000/- மதிப்பீட்டில் வருடாந்திர பராமரிப்பு தொகைக்கான ஆணையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.25,000/- மதிப்பீட்டில் பயிர் விளைச்சல் போட்டிக்கான பரிசுத்தொகையும்,
தொழில் வணிகத்துறையின் சார்பில்
02 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆணைகளும் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.30,83,159/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வழங்கினார்.
மேலும், 105 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், வருவாய்த்துறை மற்றும் பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 384 அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
பின்னர், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துக்கழுவன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.