நாகர்கோவில் – அக்- 23,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் மேற்பார்வையில் நாகர்கோயில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் கோட்டார் போக்குவரத்து காவலர்கள் நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள எஸ் எல் பி அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் சுமார் 350 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போக்குவரத்து அடையாளப் பலகைகள் சாலை அடையாளங்கள் மற்றும் நேரலை விபத்து காணொளிகளுடன் கூடிய படங்கள் காண்பிக்கப்பட்டு. வாகன ஓட்டிகளில் தவறுகள் குறித்து விளக்கப்பட்டது.



