தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய 2023-24 சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து மலையான்குளம் இந்திரா காலணியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்களின் அவசிய தேவையான சிமெண்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை வகித்தார்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்
ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் கண்ணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ்,
மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கணேசன், மலையான்குளம் கிளைசெயலாளர் கருத்தப்பாண்டியன், இந்திரா காலனி கிளைக் கழக செயலாளர் பூச்சியப்பன், சிதம்பராபுரம் கிளை செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், பாக முகவர் ஆரோக்கியசாமி,ஜார்ச்பீட்டர்,ஆசிரியர் செல்வராஜ், சேசுராஜ், ஜேம்ஸ், சகாயராஜ், அந்தோணிராஜ், செந்தில்குமார், மதன், சுதாகர், ஒன்றிய பிரதிநிதி கணேசன், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பழனிவேல்முருகன், அரசு ஒப்பந்தகாரர் மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய ராஜா எம்எல்ஏவிற்கு பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.



