ராமநாதபுரம், ஜன.24-
மழைக்காலம் வந்தாலே காய்ச்சலும் தலைவலியும் வந்து விடுவது இயல்பு. இத்துடன் அன்பளிப்பாக இருமல் சளியும் ஜலதோஷமும் வந்து விடும். இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சில நாட்கள் துன்புறுத்தும். பிறகு சரியாகி விடும். சமீபத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவை சரியாகி விட்டது. ஆனால் தற்போது உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு பரவி வருகிறது.
இந்த பதிவு மக்களை பயமுறுத்த அல்ல. தற்காத்துக் கொள்வதற்கான பதிவு. இந்த காய்ச்சல் ஏற்பட்டால் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்று பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது;
பொதுவாக
மழைக்காலம் வந்தாலே காய்ச்சலும் தலைவலியும் வந்து விடுவது இயல்பு. இத்துடன் அன்பளிப்பாக இருமல் சளியும் ஜலதோஷமும் வந்து விடும். இவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாவிட்டாலும் சில நாட்கள் துன்புறுத்தும். பிறகு சரியாகி விடும். சமீபத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அவை சரியாகி விட்டது. ஆனால் தற்போது உண்ணிக் காய்ச்சல் ஏற்பட்டு பரவி வருகிறது
இதற்கு
தொண்டை வலி,தலைவலி, தசைவலி,உடம்பு வலி, வாந்தி ஆகியவை ஏற்படும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த காய்ச்சலுக்கும் வித்தியாசம் தொண்டை வலி,தசைவலி,உடம்பு வலி ஆகும்.
இது ஆந்திரா,கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஏற்படுகிறது. அதுவும் மழைக்காலத்தில் மட்டுமே ஏற்படும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களும் பாதிப்படையாமல் தற்காத்துக் கொள்ள விரும்புபவர்களும் குளிக்கவும் குடிக்கவும் சுடுத்தண்ணீரை பயன்படுத்துங்கள்.
குளிக்கும் தண்ணீரில் கைப்பிடியளவு வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் குளிக்கவும்.
நிலவேம்பு கஷாயப் பொடியுடன் சீந்தில் கொடி வேரை சேர்த்து கஷாயம் வைத்து ஒரு வாரத்திற்கு காலை மற்றும் இரவு 30 மில்லி வீதம் குடித்து வரவும்.
சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்,கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இரவு மட்டும் குடித்து வரவும்.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வரும்பொழுது கைக்கால்களை சுத்தமாக கழுகி விட்டு வரவும்.
உடலில் வலியோ தசைகளில் வலியோ இருந்தால் கவனமற்று இருந்து விடாதீர்கள். சுக்குத்தைலம் வாங்கி நன்றாக பூசிவிட்டு கல் உப்பை சூடாக்கி ஒத்தடம் கொடுத்து வரவும்.
இவை எல்லாம் செய்தும் பலன் இல்லை என்றால் தங்களின் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்க்கவும்.
மேலும் விபரங்கள் பெற ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் ரோட்டில் உள்ள சுகம் வைத்தியசாலையில் 8940004050 என்ற எண்ணில் முன் பதிவு செய்து நேரில் வந்து சந்தித்து ஆலோசனை பெறலாம்
இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து கூறியுள்ளார்.