தென்தாமரைகுளம். மார்ச்., 10.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பின் நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம். நாகர் கோவில் பிஷப் ஹவுல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 95 ஆயிரம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 80% டி. ஏ வை கோர்ட் உத்தரவை கருத்தில் கொண்டு மார்ச் 14-ல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கி 9 வருடமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை உடனே வழங்க வலியுத்தியும், 30-5-2023 to- 28-2-2025 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணபலன்களையும் அரசு வழங்க வேண்டியும், 15. ஆவது ஊதிய ஒப்பந்ததை பேசிமுடித்து அமல்படுத்தவும்,மருத்துவ காப்பீட்டை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.