நாகர்கோவில் – நவ- 26,
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள விக்ரமநேரி குளம் சுற்றுவட்டார மக்களின் குடிநீர் தேவைக்காகவும்,விவசாயத்திற்கும் பெரிதும் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில் பூதப்பாண்டி பேரூராட்சி சில வருடங்களுக்கு முன் குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவு நீரை குளத்தில் திருப்பி விட்டதால் குளம் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே, கழிவுநீர் குளத்தில் கலக்காதவாறு குளத்தை சுத்தப்படுத்தி குளத்தின் கரைகளை சீரமைத்து பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் அளவில் மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திட்டுவிளை நகர எஸ்டிபிஐ சார்பில் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதில் எஸ் டி பி ஐ நகர தலைவர் ஷேக் மைதீன் நகர செயலாளர் முகமது ரிஸ்வான், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் யாசர் கிளை தலைவர் ரியாஸ் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.