நாகர்கோவில் ஜன 31,
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து தற்போது தாலுக்கா காவல் நிலையத்திற்கு பணிமாறுதலில் செல்ல இருக்கும் காவலர்களுக்கு நேற்று -30 ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் வெளிப்படை தன்மையுடன் நடந்த கலந்தாய்வில் காவல் நிலையங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசியதாவது:- காவலர்கள் தங்கள் பணியில் நேர்மையாக முழு ஈடுபாடுடன் சிறப்பாக செயல்பட வேண்டும் எனவும்,பொது மக்களிடம் மரியாதையுடன் நல்ல அணுகு முறையில் ஈடுபட வேண்டும் எனவும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.