தென்காசி மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட தொழில் மையம் தென்காசி அலுவலகம் மூலம் தமிழக அரசின் குறுங்குழும திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அரசு சேக்கிழார் பள்ளி வளாகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழுமத்தில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி நாடாமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டு இக்குழுமத்தின் ஆடை வடிவமைப்பு மாதிரியை வெளியிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், ஆலங்குளம் ஒன்றியக் குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலங்குளம் வட்டாட்சியர் ஓசன்னா, முன்னோடி வங்கி மேலாளர் கணேசன், தென்காசி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கத் தலைவர் அன்பழகன், ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமார், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆலங்குளம் பெண்கள் ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள் குழும இயக்குநர் வளர்மதி மற்றும் குழும உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.